மடிந்து நெளியும்
மண்புழுதானும்
மண்ணுக்காகும்
மண்ணுக்கானால் பயிருக்காகும்
ஊறும் கம்பளி
உடற்கூடு உடைத்து
அஞ்சிறைத்தும்பியாய்
கண்ணுக்காகும் கவினுடைத்தாகும்
நடுங்கிடச் செய்யும்
நச்சுடைப்பாம்பும்
திருட்டெலி கொன்று அதன்
தின்பொருள் காக்கும்
தன்னுடை ஓட்டைத்
தான்சுமந்து இரியும்
தன்னல நத்தைகள்
என்னத்துக்காகும்
No comments:
Post a Comment