நான்தான்

நான்தான்

Thursday, June 30, 2011

பல்லுயிர்ப்பெருக்கம்

மடிந்து நெளியும்

மண்புழுதானும்

மண்ணுக்காகும்

மண்ணுக்கானால் பயிருக்காகும்


ஊறும் கம்பளி

உடற்கூடு உடைத்து

அஞ்சிறைத்தும்பியாய்

கண்ணுக்காகும் கவினுடைத்தாகும்


நடுங்கிடச் செய்யும்

நச்சுடைப்பாம்பும்

திருட்டெலி கொன்று அதன்

தின்பொருள் காக்கும்


தன்னுடை ஓட்டைத்

தான்சுமந்து இரியும்

தன்னல நத்தைகள்

என்னத்துக்காகும்


உடையடா ஓட்டை

No comments: