நான்தான்

நான்தான்

Thursday, September 20, 2012

ஒரு நல்ல கவிதை

கேளாச் செவியை
உனக்குக் கொடுத்து
தூரக்குயிலைக்
கூவச்சொல்லியும்

குச்சியெடுத்து
எறும்பு துரத்திக்
குறுக்குநெடுக்காய்
ஓடவிட்டும்

புத்தகந் தூக்கிப்
பக்கம் புரட்டிக்
கோடுகள் பார்த்தும்

அலுத்துப் போச்சு

பூக்களைப் பற்றியோ
புழுக்களைப் பற்றியோ
ஒரு நல்ல கவிதை சொல்லேன்
இனியாவது

(கணையாழி, டிசம்பர் 1997 - இல் வெளிவந்த கவிதை)

No comments: