என் ஐந்தரை வயது மகன்
கன்னல் இளம்பரிதி,
என் சட்டையில்
பொத்தான் வரிசையில் உட்பக்கமாய்க் கூடுதலாய்த் தைக்கப்பட்டிருந்த பொத்தானைத்
திருகிக்கொண்டு,
'இது எதுக்குப்பா வைச்சிருக்காங்க?' என்று கேட்டான்.
மற்ற பொத்தான்களைச்
சுட்டிக்காட்டி 'இதிலொன்று உடைந்துபோனால் அதை எடுத்துவைத்துத்
தைத்துக்கொள்ளலாம்' என்று சொன்னேன்.
பொத்தானைத் திருகுவதை
விட்டுவிடாமல்
'அப்ப இது உடைந்துபோனா அதில ஒண்ணை எடுத்து இங்கு
தைச்சுக்குவியா' என்று கேட்கிறான்.
அடக்கமுடியவில்லை
சிரித்துவிட்டேன்.
No comments:
Post a Comment